Editorial / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாட்டில் முதன்முறையாக ஒரு கான்கிரீட் கட்டமைப்பை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர் .
அது மனிதவளத்தை 40 சதவீதத்துக்கும் மேல் குறைத்து செயல்திறனை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கிறது.
பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் ஊழியர் பற்றாக்குறையையும் இது நிவர்த்தி செய்கிறது.
கட்டுமான நடைமுறைகளை மறுவடிவமைக்கத் தொழில்நுட்பம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
முப்பரிமாண முறையில் அச்சிட்டுத் தனது சொந்த எடையைத் தாங்கக்கூடிய ஒரு கான்கிரீட் கட்டமைப்பை ஆய்வாளர்கள் உருவாக்குவது அது முதல் முறை.
கட்டமைப்பின் பலத்தை உறுதிசெய்யக் குழு அதைத் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்துகிறது.
தற்போதுள்ள முறைகளுடன் கான்கிரீட் முப்பரிமாண அச்சீட்டு முறையைப் பயன்படுத்தக் குழு முனைகிறது.
அதற்கான புதிய வழிகாட்டிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பெப்ரவரி 6ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago