Janu / 2025 மார்ச் 18 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் ஒரு தொன் எடையை ஏற்றிச்செல்லக் கூடிய பெரிய ரக ஆளில்லா சரக்குவிமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் (Shandong Province) கிங்டாவோவில் (Qingdao) உள்ள லைக்ஸி டியான்பு (Laixi Dianbu) விமான நிலையத்தில் சனிக்கிழமை (15) தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது,
3.3 தொன் எடையுடைய TP1000 என்ற ஆளில்லா சரக்குவிமானம், ஒரு தொன் எடையுடைய சரக்குகளைத் தாங்கும் திறன் கொண்ட நிலைமையில், 1000 கிவோ மீட்டர் தூரப் பயணத்தை நிறைவேற்ற முடியும். தற்போது விரைவாக வளர்ந்து வரும் குறைந்த உயரத்தில் சரக்கு போக்குவரத்து தேவையை இது நிறைவு செய்யும்.
டி.பி.1000 சரக்கு விமானம், 2026ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026