Kogilavani / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்திரி பீடத்தில், காயத்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் 83ஆவது குரு ஜயந்தி விழா, நாளைப் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, இன்றுச் செவ்வாய்க்கிழமை சங்காபிஷேகம், மகேஸ்வர பூஜை என்பன நடைபெற்றறதுடன் அண்ணதானமும் வழங்கப்பட்டது.
இன்று காலை 7 மணிக்கு விசேட பூஜை, காயத்திரி பூஜை மகாயாகம் என்பன நடைபெறவுள்ளதுடன், காலை 9 மணிக்கு காயத்திரிசித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் திருவுருவச்சிலையுடன் ஸ்ரீ அகஸ்தியர், மஹரிஷி விஸ்வாமித்ரர், மஹரிஷி ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபாலயோகி மஹராஜ் அனைவரினதும் திருவுருவச் சித்திரங்கள் தாங்கிய வீதி பவனி நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .