Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீவடபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாற்குடப்பவனி இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றது.
பெரியபோரதீவு நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பவனி பட்டாபுரம் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
பாரம்பரிய பறை மேளங்களுடன் பாற்குடங்களை சுமந்து வந்த அடியார்கள் தங்களது கரங்களினால் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.ஈ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.


2 minute ago
17 minute ago
25 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
17 minute ago
25 minute ago
52 minute ago