Editorial / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
1,400 கிலோகிராம் எடையுள்ள மாபெரும் காளி அம்பாள் விக்கிரகமொன்று, கிழக்கின் தென்எல்லையிலுள்ள குமுக்கன் ஆற்றுப்படுக்கையிலுள்ள குமுக்கன் மடத்தடி அம்மன் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
வன அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பில், அவர்களின் நேரடி வழிகாட்டலில், குமண சரணாலயத்தில் மாபெரும் சக்தி பீடமாக விளங்குகின்ற குமுக்கன் ஆற்றங்கரையின் மடத்தடி அம்மன் கோவிலில் மாபெரும் காளி தேவியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதானி சிவசங்கர் ஜீ இதனை பிரதிஷ்டை செய்துவைத்தார்.
அவருக்கு உதவியாக இலங்கையின் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத் தலைவர் மனோகரன் சிவயோகி மகேஸ்வரன் ஸ்வாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் செயற்பட்டனர்.


8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026