2025 மே 19, திங்கட்கிழமை

புளியந்தீவு தூய மரியாள் ஆலய வருடாந்த திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, புளியந்தீவு தூய மரியாள் பேராலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் கூட்டுத்திருப்பலி இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நேற்று புதன்கிழமை அன்னையின் திருச்சுரூப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சென்றல் வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, செபஸ்தியான் வீதி, சென் மைக்கல் வீதி மற்றும் புனித அந்தோனியார் வீதி வழியாக பேராலயத்தை சென்றடைந்தது.

இன்று காலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, அருட்தந்தையர்கள் சகிதம் ஆயர் இல்லத்திலிருந்து பங்கு மக்களினால் வரவேற்று பவனியாக அழைத்து வரப்பட்டார்.

திருவிழாக் கூட்டுத்திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் தலைமையில் பேராலய பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், தந்தையர்களான கிறைட்டன் அவுட்ஸ்கோன் மற்றும் பிறைனர் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

இவ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X