2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

Super User   / 2014 மே 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (08) பாற்குடப் பவனி இடம்பெற்றது.
 
களுவாஞ்சிகுடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து விநாயகர் பக்தர்கள் புடைசூழ பாற்குடம் சிரசிலே ஏந்திச் சென்று பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகருக் அபிஷேகம் செய்யப்பட்டது.

பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் இ.ரமேஸ் தலைமைல் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவ.ஸ்ரீ இரா.கோபாலசிங்கம் குருக்கள் தலைமையிலான குழுவினர் கிரியைகளை நடாத்தினர்.

பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (02) அரம்பமாகியது. இறுதிநாள் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (09) காலை களுவாஞ்சிகுடி கடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .