2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை (13) கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.

சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் திருவிழா கடந்த 04 ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 9 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொரூப பவனியும் வியாழக்கிழமை இடம்பெற்றது.

குரு முதல்வர் அருட்தந்தை மொறாயஸ் தலைமையில் திருப்பலிகள் நடைபெற்று இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று (13) காலை பங்குத்தந்தை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன். திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X