2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முனைக்காடு நாகலிங்கேஸ்வரருக்கு சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, முனைக்காடு அருள்மிகு ஸ்ரீநாகலிங்கேஸ்வர பெருமானுக்கு இன்று திங்கட்கிழமை பக்தர்கள் பாற்குடப் பவனி எடுத்த நிலையில், பாலாபிஷேகமும்  1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகமும் நடைபெற்றன. 

மூலமூர்த்தியான நாகலிங்கேஸ்வர பெருமானுக்கும் பரிவாரத் தெய்வங்களுக்குமாக பக்தர்கள் பாற்குட பவனி எடுத்தனர்.  இந்த நிலையில்  முனைக்காடு ஸ்ரீசித்தி விநாயகர் கண்ணகி அம்மன் கோவிலிலிருந்து பாற்குடப் பவனி எடுத்த பக்தர்கள், ஸ்ரீகொட்டாம்புலைப் பிள்ளையார் முத்துமாரியம்மன் கோவிலில்   தரிசித்துவிட்டுச் சென்றனர்.

இதன்போது பக்தர்களுக்கு சங்குத்தீர்த்தம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .