Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுஅவந்தன.
ஆலயத்தின் பங்குத்தந்தை டெக்ஸ்டர் கிறே தலையில் திருவிழாவின் இறுதி விசேட திருப்பலி பூஜை, இன்று காலை நடைபெற்றது.
இந்த விசேட திருப்பலியை மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடத்தினார்.
திருப்பலி பூஜையின் போது பக்தர்களுக்கு ஆயரினால் ஆசிகள் வழங்கப்பட்டதுடன், விசேட தேவ இசை நிகழ்வும் நடத்தப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து சொரூபம் ஆலய முன்றிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago