Kogilavani / 2019 ஜூலை 23 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி கோவிலில், சனிக்கிழமை (27) ஸ்ரீ வித்யா, சரஸ்வதி ஹோமப் பூஜைகள் இடம்பெறவுள்ளன.
இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகளை இப்பூஜையில் கலந்துகொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பூஜையின் இறுதியில், ஹோமப் பூஜையில் முன்வைக்கப்பட்ட கற்கை உபகணரங்கள், பேனை, திருக்காப்பு, பிரசாதங்கள் என்பவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இப்பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரிபாலன சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago