Ilango Bharathy / 2022 மார்ச் 05 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1931: அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் இந்தியர்கள் உப்பை சுதந்திரமாகவும் பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியும் இந்தியாவுக்கான பிரித்தானிய ஆளுநர் லின்ட்ஸே வூட்டும் கையெழுத்திட்டனர்.
1946: பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது உரையொன்றில் முதல் தடவையாக இரும்புத்திரை எனும் சொற்றொடரை பயன்படுத்தினார்.
1953: 2 தசாப்தங்களுக்கு மேலாக சோவியத் யூனியனை ஆட்சி செய்த அதிபர் ஜோசப் ஸ்டாலின் காலமானர்.
1966: பிரித்தானிய விமானமொன்று ஜப்பானின் பியூஜி மலையில் வீழ்ந்தால் 124 பேர் பலி.
1970: அணுவாயுத பரவல்தடுப்பு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
1973: ஸ்பெய்னின் இரு விமானங்கள் பிரெஞ்சு வான்பரப்பில் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதால் 68 பேர் பலி.
24 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 Mar 2026