Ilango Bharathy / 2022 மே 04 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1904: பனாமா கால்வாய்க்கான கட்டுமானம், ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1919: மே நான்கு இயக்கம் - சீனாவின் பிராந்தியங்கள், ஜப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து, தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில், மாணவர் போராட்டமொன்ற நடத்தப்பட்டது.
1926: ஐக்கிய இராச்சியத்தில், பொது வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
1930: மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு, யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானால் முதல் நாள் கைப்பற்றப்பட்ட துளகிதீவு மீது, அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆம்பூர்க் நகரிலிருந்த நியூவென்காம் வதை முகாமை, பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945: இரண்டாம் உலகப் போர் - வடக்கு ஜேர்மனி, பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949: அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ.கணபதி, மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால், கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949: இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில், டொரினோ கால்பந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1953: ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக, புலிட்சர் பரிசு பெற்றார்.
35 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
30 Mar 2026