Editorial / 2021 மே 22 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906: ரைட் சகோதரர்கள், தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் ஐந்து ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில், 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.
1958: இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில், நூற்றுக்கணக்கான தமிழர்கள், சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960: தெற்கு சிலியில் ஏற்பட்ட 9.5 ரிச்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967: பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில், 323 பேர் உயிரிழந்ததோடு, 150 பேர் காயமடைந்தனர்.
1968: அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில், 99 பேர் உயிரிழந்தனர்.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து, குடியரசு ஆகியது. சிலோன் - ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.

1990:வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990: விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004: நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியால், ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026