Menaka Mookandi / 2015 ஜனவரி 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம் எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து மன்னன் இவன்.
1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.
1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும் மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை கண்டுபிடித்தனர்.
1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.
1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.
1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.
2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.
2010: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.
2011: எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
7 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
31 minute ago