Menaka Mookandi / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1554: இங்கிலாந்தில் 9 நாட்கள் அரசியாக பதவி வகித்த ஜேன் கிறே, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
1593: 30 ஆயிரம் பேர்கொண்ட ஜப்பானிய படையெடுப்பை 3 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரிய படை முறியடித்தது.
1934: ஆஸ்திரிய சிவில் யுத்தம் ஆரம்பம்.
1961: சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை நோக்கி வெனேரா -1 விண்கலத்தை ஏவியது.
1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான அமெரிக்க செனட் சபையின் குற்றவியல் விசாரணையில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

1999: மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று எச்சரிதத்து.
2001: விண்கல் ஒன்றின் மீது முதல் தடவையாக விண்கலமொன்று இறக்கப்பட்து.
2002: யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கிற்கு எதிராக, நெதர்லாந்திலுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை மன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியது.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026