Menaka Mookandi / 2016 ஏப்ரல் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1815: இந்தோனேஷியாவின் தாம்போரா எரிமலை வெடிப்பினால் சுமார் 71,000 பேர் பலி. இவர்களில் 11,000 பேர் நேரடியாகவும் ஏனையோர் பஞ்சம் மற்றும் நோய்களினால் இறந்தனர்.
1912: டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சௌதம்டன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
1963: அமெரிக்க நீர்மூழ்கியொன்று கடலில் மூழ்கியதால் 129 பேர் இறந்தனர்.
1972: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 5,200 பேர் பலியாகினர்.
1998: 30 வருட கால வட அயர்லாந்து மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
1972: உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில் 74 நாடுகள் கையெழுத்திட்டன.
1979: டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42பேர் பலியாகினர்.
1984: ஈழப்போர் - பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985: ஈழப்போர் - யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991: இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல், லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140பேர் உயிரிழந்தனர்.
1992: லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம், ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998: அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.
2002: விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டார்.
2006: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60பேர் உயிரிழந்தனர்.
2010: போலந்து விமானப்படை விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த போலந்து ஜனாதிபதி லேச் கஸின்ஸிக் உட்பட 96 பேர் பலி.
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago