2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 07

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1929 : பின்லாந்தில் 'குரு' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில், 136 பேர் கொல்லப்பட்டனர்.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜேர்மனியினர் இலண்டன் நகரில், 300 டொன்  கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.

1942 : உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

1943 : டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.

1950 : ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.

1953 : நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.

1965 : இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.

1977 : பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.

1978 : கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

1978 : பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் இலண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில், பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1986 : தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.

1986 : சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.

1988 : ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட், சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.

1998 : கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.

1999 : ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.

1999 : இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதை குழி விபரம் தெரியவந்தது.

2004 : சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில், 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .