Ilango Bharathy / 2021 ஜூன் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான, 20-பேர் கொண்ட குழு, வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரிலிருந்து ஆரம்பித்தது. அத்துடன் பயணமான இக்குழு, திரும்பி வரவேயில்லை.
1940 : இரண்டாம் உலகப் போர் - இத்தாலி, பிரான்சை ஊடுருவியது. ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
1956 : வெனிசுவேலாவைச் சேர்ந்த, லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில், 74 பெர் உயிரிழந்தனர்.
1960 : மாலி கூட்டமைப்பு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.
1973 : அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறி சுடுநர்கள் சுட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1990 : ஈரானின் வடக்கே 7.4 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000 –50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
1991 : ஜேர்மனியின் தலைநகரை, பான் நகரிலிருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக, செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1941 : சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் பிறந்த தினமாகும்.
2003 : விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025