Ilango Bharathy / 2021 ஜூலை 04 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
1810: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1837 உலகின் நீண்ட தூர ரயில்சேவை பிரிட்டனின் பேர்மிங்ஹாம் , லிவர்பூல்நகரங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1903: ட்ரோதி லெவிட் என்பவர் மோட்டார் பந்தயப் போட்டியில் பங்குபற்றிய முதல் பெண்ணானார்.
1918: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் சார் மன்னரும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.
1941: உக்ரேனில் கைது செய்யப்பட்ட போலந்து விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் ஜேர்மனியின் நாஸி படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1946: 381 வருடங்கள் பல நாடுகளின் காலனி நாடாக இருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது.
1947: இந்தியா, பாகிஸ்தான் எனும் இரு சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான பிரேரணை இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
1966: அமெரிக்காவில் தகவல் சுதந்திர சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் கையெழுத்திட்டார்.
1976: கடத்தப்பட்டு உகண்டாவின் எண்டபே விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எயார் பிரான்ஸ் விமானத்தையும் 248 பயணிகளையும்12 ஊழியர்களையும்மீட்கும் அதிரடி நடவடிக்கையை இஸ்ரேலிய கமோண்டோக்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 260 பணயக்கைதிகளில் நால்வரும் கொமாண்டோக்களில்ஒருவம் பலியாகினர். கடத்தல்காரர்கள் 7 பேரும் உகண்டா படையினர் படையினர் 45 பேரும் பலி.
1997: செவ்வாய் கிரகத்தில் நாஸாவின் பாத் பைண்டர் விண்கலம் தரையிறங்கியது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025