Ilango Bharathy / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1937: சீனாவின் நான்கிங் நகரைக் கைப்பற்றிய ஜப்பானிய படையினரின் பல வாரகால வெறியாட்டம் ஆரம்பமாகியது. ஜப்பானிய படையினரால் 20,000 பேர் கொல்லப்பட்டதுடன் 80,000 பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.
1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.
1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றினார்.
2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.
2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
31 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
30 Mar 2026