2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 20

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1602: டச்சு கிழக்கிந்திய கம்பனி உருவாக்கப்பட்டது.

1760: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீயினால் 349 கட்டிடங்கள் அழிந்தன.

1815: எல்பா தீவிலிருந்து தப்பி பிரான்ஸுக்கு மீண்டும் வந்த நெப்போலியன் மீண்டும் தனது '100 நாள் ஆட்சியை' ஆரம்பித்தான்.

1861: பாரிய பூகம்பமொன்றினால் ஆர்ஜென்டீனாவின் மென்டோஸா நகரம் முற்றாக அழிந்தது.

1914: உலகின் முதலாவது சர்வதேச பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் ஆரம்பமானது.

1916: அல்பர்ட் ஐன்ஸ்டைன், புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.

1952: ஜப்பானுடனான சமாதான ஒப்பந்தத்தைஅமெரிக்க செனட் சபை அங்கீகரித்தது.

1956:பிரான்ஸிடமிருந்து டியூனிசியா சுதந்திரம்  பெற்றது.1990: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.

1974: இலண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

1988: எரித்திரியாவில், எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1995: டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல்: 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003: அமெரிக்கா மற்றும் ஏனைய 3 நாடுகளின் படைகள் ஈராக் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

2005: ஜப்பானில் புகுவோகா நகரில் ஏற்பட்ட 6.6 ரிச்சடர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. 100 வருடகாலத்தில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாக அப்போது அது விளங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .