2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 04

Ilango Bharathy   / 2022 மே 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1904: பனாமா கால்வாய்க்கான கட்டுமானம், ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1919: மே நான்கு இயக்கம் - சீனாவின் பிராந்தியங்கள், ஜப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து, தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில், மாணவர் போராட்டமொன்ற நடத்தப்பட்டது.

1926: ஐக்கிய இராச்சியத்தில், பொது வேலைநிறுத்தம் ஆரம்பமானது.

1930: மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு, யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானால் முதல் நாள் கைப்பற்றப்பட்ட துளகிதீவு மீது, அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆம்பூர்க் நகரிலிருந்த நியூவென்காம் வதை முகாமை, பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - வடக்கு ஜேர்மனி, பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

1949: அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ.கணபதி, மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால், கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

1949: இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில், டொரினோ கால்பந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

1953: ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக, புலிட்சர் பரிசு பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .