Lenin Raj / 2026 மார்ச் 18 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று தென்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 250 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பிரியங்கா - 6' (Priyanka - 6) எனும் IMULA - A- 1108GLE இலக்கம் கொண்ட பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026