Lenin Raj / 2026 மார்ச் 13 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் கிருஷ்ணா
நுவரெலியா மாவட்டம், அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் திங்கள் கிழமை (12) மாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் சுமார் இரண்டு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
மலையகப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக ஆங்காங்கே காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று மாலை 5 மணியளவில் லெதண்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள மானா புற்காட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இவ்வாறான இக்கட்டான சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்களிடையே பெரும் அச்சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நிலவும் கடும் காற்று மற்றும் வெப்பம் காரணமாகத் தீ வேகமாகப் பரவியதில் பெருமளவிலான நிலப்பரப்பு தீக்கிரையானதுடன், அப்பகுதியின் சூழலமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காடுகளுக்குத் தீ வைக்கும் இவ்வாறான விசம செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago