J.A. George / 2022 ஜனவரி 11 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய அரசியல்வாதிகள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.
எனவே, அரசியல்வாதிகள் மக்களை ஒன்று கூட்டுவரை தவிர்த்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல்வாதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அநாவசியமான அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாக ஒன்று கூடல்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025