Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.றம்ஸான்)
பொத்துவில் ஊரணிப் பகுதியில் நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கூறப்படும் 3 நபர்களை பொதுமக்கள் நேற்று வியாழக்கிழமை இரவு துரத்திச் சென்று பிடித்துள்ளனர். எனினும் பிடிக்கப்பட்ட நபர்கள் மர்ம நபர்கள் அல்ல எனவும் அவர்கள் வனபாதுகாப்புத்துறை உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி இராணுவத்தினர் அழைத்துச்சென்றனர். இதனால் ஊரணியில் நேற்று நள்ளிரவு வரை பல மணித்தியாலங்கள் பதற்றம் நிலவியது.
இந்நபர்கள் நூற்றுக்கணக்ககான மக்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த இராணுவ வீரர்கள், சிலர் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபரகள் மர்ம மனிதர்களோ கிறீஸ் மனிதர்களோ அல்ல எனவும் அவர்கள் வன பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனவும் தெரிவித்தனர். யானைகளை கணக்கெடுப்பதற்காக இவர்கள் வந்ததாகவும்; இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அதையடுத்து பொதுமக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'இவர்கள் வனபாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்றால் அவர்களின் சீருடை எங்கே?, யானைகளை கணக்கெடுப்பதென்றால் காட்டில்தானே அதை செய்யவேண்டும். ஏன் ஊருக்குள் வந்தார்கள்? என்று கிராம மக்கள் கேள்விகளை எழுப்பினர்.
அதன்பின் அங்குவந்த வனபாதுகாப்புத் திணைக்கள அதிகாரியொருவரும் மேற்படி நபர்கள் தமது திணைக்களத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார். அப்போதும் பொதுமக்கள் அங்கு சூழ்ந்திருந்த நிலையில் இராணுவத்தினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொதுமக்களை அங்கிருந்து அகலச் செய்து மேற்படி 3 நபர்களையம் அழைத்துச் சென்றனர். நேற்று நள்ளிரவு வரை இப்பரபரப்பு நீடித்தது.
இதேவேளை பொத்துவில் கே.பி.எம். வீதியில் 22 வயதான பெண்ணொருவர் நேற்றிரவு கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் திரும்பியபோது கூரையிலிருந்த நபர் ஒருவர் கொழுக்கி போன்ற ஒருபொருளை அப்பெண்ணின் ஆடையில் கொழுவி, அப்பெண்ணை தூக்க முயன்றதாகவும் அப்பெண் பயந்து அலறிய நிலையில் சந்தேக நபர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறு காயங்களுக்குள்ளான இப்பெண் அதிர்ச்சியில் மயங்கிவிழுந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மர்ம மனிதன் வந்துவிட்டதாக கூறி பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் மர்ம மனிதன் என்பது வாந்தி, பயப்படவேண்டாம் அமைதியாக இருங்கள் என பிரதேசவாசிகளிடம் கூறினர். ஆனால், வதந்தி என்றால் அப்பெண் காயமடைந்தது எப்படி மக்கள் கேள்வி எழுப்பினர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
சிறாஜ் Friday, 12 August 2011 09:14 PM
இது பொலிஸாரின் ஆதரவில்தான் நடக்குது என்று மக்கள் சந்தேகிக்கும் விதமாக நடந்து கொள்வது கண்டிக்கதக்கது. எனவே பொதுமக்கள் பீதியில் இருக்கும் போது சும்மா விரண்டா வாதம் பேசி மக்களை சமாளிப்பதனை விட்டுட்டு மக்களின் பீதியை போக்க வீதிக்கு இறங்கனும் பொலிசார். யார் இந்த மர்ம கும்பல் என்று கண்டு பிடிக்கனும்.
Reply : 0 0
MANITHAN DA MANITHAN Friday, 12 August 2011 10:09 PM
நீங்க வேறங்க..... யார் மர்ம கும்பல் ? வேறே வானத்தில் இருந்ததா மர்ம மனிதன் குதிக்கப் போறான் .
Reply : 0 0
akkaraipattu Friday, 12 August 2011 10:12 PM
மக்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் எதற்காக? போலீஸ் எதற்காக?
Reply : 0 0
abdul mohamed Friday, 12 August 2011 11:07 PM
என்ன நடக்குது என்று பொறுப்பில்லாமல் எல்லோரும் இருக்க முடிமா ? பொறுப்பானவர்கள் இதை பார்த்தல் வீணாக உயிர்கள் பறிக்கப்படாதுதானே? அரசாங்கம் என்ன செய்கிறதோ தெரியாது.
Reply : 0 0
srilankan Saturday, 13 August 2011 11:21 AM
அரசாங்கம் எந்த விசயத்தில் பாராமுகமாக இருகின்றது?
Reply : 0 0
Faariz Saturday, 13 August 2011 07:20 PM
அது சரி ...நம்ம பக்க அரசியல்வாதிங்க என்ன சார் பண்றாங்க??? எல்லாமே மர்மமாகவே இருக்கு..
Reply : 0 0
shaaan Saturday, 13 August 2011 10:35 PM
என்ன பாரீஸ் இது கூட தெரியாதா? அவங்க அவங்க அரசியல் செய்றாங்க? அப்பாவி இறப்பது ????
Reply : 0 0
trusties of pottuvil Saturday, 13 August 2011 10:46 PM
சுமார் இரண்டு கிழமைகளாக நாட்டின் நாலா பாகங்களிலும் நடந்து கொண்டும், பல பேர்கள் சந்தேக நபர்களாக பிடிபட்டும் இருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இதை வெறும் வதந்தி என்று கூறிக் கொள்வது, வேடிக்கையாக உள்ளதுடன் இது வெறும் கட்டுக் கதை என்று சொல்வது, சொல்பவர்களையே இதற்கு பின்னணியானவர்கள் என சந்தேகிக்க தோன்றுகிறது, இதை இன்னும் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் கேள்விக் குறியே ஏன்? எதற்கு? யாரால்? என்ன பின்னணி? இது இன்னும் தொடர்ந்தால் கொள்ளப்படுவது சிறுபான்மை அப்பாவி சமூகமே என்பது தெட்ட தெளிவான உண்மை.
Reply : 0 0
mohamed Sunday, 14 August 2011 04:46 AM
அரசியல்வாதிகளும் மர்மமனிதனின் கூலிப்படைகளா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago