2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 4 பேரை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களை; கைதுசெய்வதற்கான நடவடிக்கையை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்த 3 பேரையும்; அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .