2025 ஜூன் 07, சனிக்கிழமை

6 வருடம் கடந்தும் வீடில்லை: சுனாமியால் பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.அன்சார் எஸ்.மாறன்)

 

 

கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 06 வருடங்கள் கடந்தும் இதுவரை மக்களின் வீடுகளை கையளிக்கப்படாததனையிட்டு அம்மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை கவனஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தி  பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை 10.30 மணியளவில் அரசாங்கத்தைக் கண்டித்து சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். அன்சாரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
 
அம்மகஜரில்,

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அவர்களின் காணிகளிலேயே வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். ஆனால் நாங்களோ சேதம் அடைந்த வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் மாறி மாறி வாழ்ந்து 06 வருடகாலத்தை கண்ணீருடனும், கஷ்டத்துடனும் கழித்து விட்டோம்.

எனவே இவ் விடயத்தில் மௌனிகளாக இருப்பவர்களின் கண்களைத் திறப்பதற்கும், எமது அவல நிலையை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்துவதற்குமான ஓர் கவனஈப்பு போராட்டத்தை நடத்தி எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவேண்டி இப்போராட்டத்தில் இம் மகஜரை கையளிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர ஆகியோருக்கு பிரதேச செயலாளரால் தொலை நகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .