2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 9 பேரை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்திய மின்சார வயர்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04 மணியிலிருந்து இலங்கை மின்சார சபையைச் சேர்ந்தவர்களும்; பொலிஸாரும் இணைந்து  சோதனை மேற்கொண்டனர். இதன்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும்  9 பேரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இந்த 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X