2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் விழிப்புணர்வு குழவினரால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டமானது 10.30 மணியளவில் நிறைவடைந்தது.

இதேநேரம், இந்த ஆர்ப்பாட்டத்து இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


 


  Comments - 0

  • Mohamed Wednesday, 29 September 2010 07:18 PM

    மட்டக்களப்பில் மந்திரி மதிக்கவில்லையாம் (உண்ணாவிரதம்), கல்முனையில் சக ஊழியர்களை மதிக்கவில்லையாம் (ஆர்ப்பாட்டம் )...........
    ஒன்று மட்டும் நிச்சயம். சத்தியம் வெல்லும் ஆனால் அது எப்போது வெல்லும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .