2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மாடுகளின் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதால் மக்கள் விசனம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கரைவாகு வட்டையில் மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வயல் நிலங்களிலும் ஆற்று ஓரங்களிலும் வீசுவதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மாடுகளை அறுக்கும் தொழுவத்தினுள் மாடுகளை அறுக்காமல் வெளியில் கொண்டு வந்து அவற்றை அறுப்பதுடன் அவற்றின் கழிவுகளை வெளியிடங்களில் கொண்டு வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக்காணப்படுவதுடன், இக்கழிவுகளினால் பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .