2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனையில் 'வாழும்போதே வாழ்த்துவோம்'

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சுயாதீன தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பு ஆகியவை இணைந்து 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்வொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மருதமுனை அஷ்ரப் மண்டபத்தில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன தேசிய முன்னணியின் தலைவரும், சட்டத்தரணியுமான இஸ்மாயில் பி. மஆரிஃப் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, பல முக்கியஸ்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர். வைபவத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • kaium Tuesday, 21 December 2010 04:43 AM

    ஏன் வேறு ஊரில் ஒழுங்காக வாழ்ந்தால் வாழ்த்தமாட்டர்களா?

    Reply : 0       0

    latheef Tuesday, 21 December 2010 07:25 PM

    வாழ்த்துவது நல்லது தான் நோக்கமும் நல்லதானால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .