Super User / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகளிர் அமைப்புக்கள் மற்றும் வொலிவேரியன் கிராம அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த முப்பெரு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றன.
வொலிவேரியன் வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிராமத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டு; விதாதா வள நிலையத்தின் புதிய கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா பிரதம அதிதியாகவும் இபாட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ரீ.முத்துமால, வன பரிபாலன திணைக்கள அதிகாரி எம்.ஏ.ஜாயா சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.தௌபீக் மற்றும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஐ.அலியார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025