2025 ஜூன் 07, சனிக்கிழமை

சுகாதார அமைச்சர் அம்பாறை மாவட்டத்தின் பல வைத்தியசாலைகளுக்கு விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பதியத்தலாவை மற்றும் தெய்யத்தகண்டிய ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்த அழைப்பை ஏற்று சுகாதார அமைச்சர் இந்த வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.

அத்துடன் மத்திய, மாகாண அரச நிதிகளின் மூலம் மூன்று வைத்தியசாலைகளிலும் அமைக்கப்பட்ட மூன்று விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்ததுடன் இந்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய உபகரணங்களும் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .