2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம் மழையினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, சாய்ந்தமருது ,நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி, திருக்கோவில் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்முனையில் சில வீதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் படகுசேவையினூடாகவே மக்கள் பயணம் செய்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .