2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை ஸாஹிரா கல்லூரி வெள்ளத்தில்

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் 2011ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக  எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானம் மற்றும் வகுப்பறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் இவ்வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் க.பொ.த.(சா/த) பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாவுள்ளன.

திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி மூடப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .