2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை வலய பாடசாலைகளில் கால்கோள் விழா

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் ஆகியவற்றில் எதிர்வரும் 18ஆம் திகதி கால்கோள் விழா இடம்பெறவுள்ளது.


கல்வியமைச்சின் ;சுற்றறிக்கைக்கு அமைய இவ்வருடம் முதலாம் தரத்தில் இணைந்துகொள்ளும் புதிய மாணவர்களை இரண்டாம் தர மாணவர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்பதுடன் கலை நிகழ்சிகளும் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.


முதன் முதலில் தம் வாழ்நாளில் பாடசாலைக்கு காலடி எடுத்து வைக்கும் நாள் மாணவர்களின் நினைவில் பதியக்கூடியதாக இருப்பதற்காகவே இந்த நிகழ்சிகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X