2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லையென புகார்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் எந்தவித  நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் அடை மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து நாம் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் எம்.எம். நௌபலிடம் வினவியபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களினதும் விபரங்களை தாம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .