2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

'நூலகங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக மாறவேண்டும்'

Kogilavani   / 2011 ஜனவரி 06 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 (ஹனீக் அஹமட்)

நூலகம் என்பது வெறுமனே பத்திரிகைகளை மட்டும் வாசிக்கும் இடங்களல்ல. அவை அறிவைத் தேடும் இடங்களாக மாற வேண்டும். ஒரு நூலகத்தின் வளர்ச்சிக்கு  அதன் சுற்றுப்புறத்திலுள்ளவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நூலகங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றவர்களே அறிவுத் தேடலுடைவர்களாகின்றனர் என அட்டானைச்சேனை பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.அன்சில்  தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதி நூலகத்துக்கான புதிய கட்டிடம் இன்று அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புதிய கட்டிடத்தை தவிசாளர் எம்.ஏ.அன்சில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச உதவிச்  செயலாளர் எம்.எம்.லத்தீப் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .