Super User / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
தீ விபத்துக் காரணமாக, பெரியநீலாவணை அக்பர் கிராமத்திலுள்ள மளிகைக் கடையொன்று முற்றாக எரிந்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ அனர்த்தம் காராணமாக கடையிலிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களும், ஒரு இலட்சம் ரூபாய் பணமும் முற்றாக எரிந்துபோயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஐ.அலிபுதீன் என்பவரின் கடையே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த அனர்த்தம் குறித்து கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் இந்த தீ விபத்து ஏட்டுள்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025