2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2011 மே 31 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை அல்/ மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில இன்று செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புகைத்தலை ஒழிக்கும் நோக்கோடு சித்திரப்பாட பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்,  அம்பாறை மாவட்டத்தின் பிரதேசசெயலக பிரிவுமட்டத்தில்  விழிப்பூட்டல் செயலமர்வுகளும், ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

கல்முனை பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் இவ் விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்றன.

சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். நௌசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.அன்வர் உட்பட பிரதேச செயலகமட்ட கள உத்தியோகத்தர்களும், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.
 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .