2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி தினப் போட்டி

Kogilavani   / 2011 ஜூன் 01 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழித் தினப் போட்டி இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 பாடசாலைகளின் மாணவர்கள்  போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில் ஆங்கிலப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம். அபுல்ஹசன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். மற்றும் அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை அதிபர் கே.எம். சுபைர், அறபா வித்தியாலய அதிபர் எம்.ஐ. அப்துல் சலாம் மற்றும் தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .