2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் திட்டமிட்டபடி நடைபெறும்'

Super User   / 2011 ஜூன் 01 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

சர்ச்சைக்குரிய, கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் திட்டமிட்டபடி இடம்பெறும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநரினால் இந்த இடமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் மாகாண அமைச்சரவையின் அனுமதி கிடைக்கில்லை.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க வலயங்களுக்குட்பட்ட இடமாற்றங்கள் எதிர்வரும் ஜுன் 14ஆம் திகதியும் வலயத்திற்கு அப்பாற்பட்ட இடமாற்றங்கள் ஜுன் 27ஆம் திகதியும் இடம்பெறும் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி வலயங்களுக்குட்பட்ட இடமாற்றத்தின் போது தமிழ்மொழி மூலமான 1,862 ஆசிரியர்களும் சிங்கள மொழி மூலமான 508 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வலயங்களுக்கு அப்பாற்பட்ட ஆசிரிய இடமாற்றம் தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த இடமாற்றங்களின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரிய சமமின்மை நிவர்த்தி செய்யமுடியும் என கூறினார்.

சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை முதலமைச்சர் உள்ளடங்களாக அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் எதித்ர்ததுடன் மாகாண சபை கூட்டத்தில் கண்டனப் பிரேணைகளும் கொண்டுவரப்பட்டன.

இதற்கு மேலதிகமாக மாகாணத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • Harshani Thursday, 02 June 2011 05:23 AM

    நல்ல நடவடிக்கைதான். மாகாண கல்விப் பனிப்பாளரே உடனடியாக அமுல்படுத்துங்கள். ஆசிரியர்களே தாங்கள் தங்களது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள பாடசாலையில் சேவைபுரிவதனை விட்டுவிட்டு கொஞ்சம் துாரம் சென்று கல்வி நடவடிக்கையை செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கும் புரியும்.

    Reply : 0       0

    mam.fowz Thursday, 02 June 2011 03:08 PM

    குட் நியூஸ் ஹர்ஷனி நன்றி

    Reply : 0       0

    A.M.Sahmy Thursday, 02 June 2011 08:18 PM

    The teachers must be sent out of their zones.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .