2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தீகவாவி கிராம பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

தீகவாவி  கிராம பாடசாலை மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை கற்றல் உபகரணங்களை நேற்று சனிக்கிழமை அன்பளிப்பாக வழங்கினார்.

இவர் தீகவாவி  கிராமத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தபோது தீகவாவி விகாராதிபதியிடம் ஆசிபெற்றுக் கொண்டபின்  மேற்படி கற்றல் உபகரணங்களை மாணர்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது அவர், தீகவாவி பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் தன்னால் முடிந்த உதவிகளை இப்பிரதேச மக்களுக்கு செய்வதாக உறுதியளித்தார்.

தீகவாவிக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .