2025 ஜூன் 09, திங்கட்கிழமை

உலக சுற்றாடல் தினத்தையொட்டி மரம் நடுகையும் சிரமதானமும்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 06 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அல்-மிஸ்பா மகாவித்தியாலய சுற்றாடல்க் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வுகளும் சிரமதான வேலைத்திட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன.

'சுற்றாடலின் பசுமைக்காக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அல்-மிஸ்பா மகாவித்தியாலயத்தின் சுற்றாடல் கழகப்  பொறுப்பாசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட் கலந்துகொண்டதுடன், பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .