Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 06 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸொன்றில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவர் பருவகால சீட்டுடன் பயணித்த பயணிகளை இறக்கிவிட்டு சென்றதனால் பயணிகள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்ட சம்பவமொன்று இன்று கல்முணையில் இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணம் செய்யும் Nயு-9007 என்ற இலக்கத்தையுடைய பஸ்ஸில் கடமையாற்றும் நடத்துனரே இவ்வாறான செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பஸ் நிலையத்தின் நேர கணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் இவ்விடயம் குறித்து தமக்கு தெரியாதென்றும் தெரிந்திருந்தால் உடன் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து கல்முனை சாலையில் முறையிடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
Naleem Monday, 06 June 2011 09:58 PM
இது என்ன முதல் தடவையா? ஆண்டான்டு காலம் இடம்பெறுகின்ற சம்பவம்தான். இதெல்லாம் தொடர்கதைதான், யார்தான் முற்றுப்புள்ளி வைக்கப் போறாங்களோ தெரியவில்லை. போக்குவரத்து அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு... தொடர்ந்து அவதானிப்பில் தமிழ்மிரர் இருக்கட்டும்.
Reply : 0 0
Saleem Ramees Tuesday, 07 June 2011 05:05 PM
முதல் பருவகால சீட்டை கண்டால் பஸ்ஸை நிறுத்த மாட்டாங்க. இப்போ ஏற்றி விட்டு இறக்குறாங்களா?? கஷ்டமாக இருந்தால் பருவகால சீட்டை வழங்குவதை நிறுத்துங்க யா! ஏன்யா பயணிகளையும், மாணவர்களையும் கஷ்டப்படுத்துறீங்க!! இது விடயமாக போக்குவரத்து அமைச்சு கவனமெடுக்க வேண்டும். நன்றி தமிழ் மிரருக்கு .
Reply : 0 0
nafar Tuesday, 07 June 2011 10:16 PM
நீங்கள் சொல்லுவது சரிதான் நண்பர்களே.
Reply : 0 0
siraj saudi arabia Monday, 13 June 2011 07:17 PM
உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
42 minute ago
2 hours ago