2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு புகைத்தல் தடுப்பு விழிப்புணர்வு

A.P.Mathan   / 2011 ஜூன் 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினையொட்டி முன்பள்ளி ஆசிரியைகளுக்கு - புகைத்தல், மதுபாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய உணவு, மருந்து பரிசோதகரும் - அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் போதைப் பொருள் தடுப்புப் பணிப்பாளருமான எஸ்.தஸ்தகீர் வளவாளராகக் கலந்து கொண்டு பங்குபற்றுநர்களுக்கு மதுபாவனைத் தடுப்புப் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.

நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய நபீல் பௌண்டேசன் ஸ்தாபகரும் தொழிலதிபருமான எம்.என்.எம்.நபீல் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆசிரியைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • radan Sunday, 12 June 2011 03:20 AM

    ஐயோ பாவம் இந்த பெண்கள். இவர்களுக்கு என்ன பிரயோசனம். முன்பள்ளி மாணவர்களுக்கு புகைக்க வேண்டாம் குடிக்க வேண்டாம் என்று சொல்லிக்கொடுக்கவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .