2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நியமன கடிதத்திலுள்ள நிபந்தனைகளை அறியாமை தவறே: எம்.கே.மன்சூர்

Super User   / 2011 ஜூன் 14 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் நியமனக் கடிதத்திலுள்ள நிபந்தனைகள் குறித்து – வலயக் கல்விப் பணிப்பாளராகிய - நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றமையானது மனவருத்தத்துக்குரிய விடயம் தான் என்று சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே. மன்சூர் கூறினார்.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக ஆசிரியர் இடமாற்றங்களின் நிமிர்த்தம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் அஸீஸ் மெயிடீன் என்பவருக்கு கையொப்பமிடுவதற்கு அதிகாரம் இல்லை என்றும், குறித்த நபர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை வகிக்க முடியாது என்றும் இது தொடர்பில் குறித்த நபரின் நியமனக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வரும் புகார்கள் குறித்து சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.

அஸீஸ் மெயிடீன் எனும் மேற்படி நபர் தற்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாகப் பிரிவுக்கான மாற்றாள் (யுஉவiபெ) பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். இவர் - அரசியல் பழிவாங்கல் 2001இற்;கான நிவாரண சிபாரிசுகள் - உச்ச நீதிமன்ற வழக்கு ளுநு (குசு) 260ஃ2002 தீர்ப்புக்கு அமைய கல்வி நிருவாக சேவை iii வகுப்புக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், மேற்படி வகையிலான அரசியல் நிவாரண நியமனத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவர் நிருவாகப் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரின் நியமனக் கடிதத்திலுள்ள நிபந்தனைகளில் இதுபற்றி மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

இவற்றினை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே. மன்சூரிடம் சுட்டிக் காட்டிய நாம், உங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரின் நியமனக் கடிதத்திலுள்ள நிபந்தனைகள் குறித்து நீங்கள் அறியவில்லையா எனக் கேட்டபோதேளூ அது பற்றி தான் அறியவில்லை என்றும், அதை அறிந்து வைத்துக் கொள்ளாமையானது மனவருத்தத்துக்குரிய விடயம் என்றும் கூறினார்.

இதேவேளை, மேற்படி உத்தியோகத்தருக்கு நிருவாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 4

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 4