Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 15 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் வருடத்தின் நடுப்பகுதியில் பிந்திய நிலையில் இடம்பெறுவதற்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகமே காரணமாகும் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கல்விப் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய ஆசிரியர் இடமாற்றமானது வருடத்தின் நடுப்பகுதியில், பொருத்தமற்றதொரு காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரால் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே. மன்சூர் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் பலரும் அங்கு சமுகமளித்திருந்தனர். மேற்படி இவ்விடயம் தொடர்பில் பணிப்பாளர் நிஸாம் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் வருடத்தின் நடுப்பகுதியில் பிந்திய நிலையில் இடம்பெறுவதற்கு காரணம், கல்வி வலயங்கள் சரியான தகவல்களை கொண்டிருக்காமைதான். அதிலும் இந்த இடமாற்றம் மிகவும் பிந்துவதற்கு மிக முக்கியமான காரணம் சம்மாந்துறை வலயமாகும்.
ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை பிழையான முறையிலும், மிகவும் பிந்திய நிலையிலும் சம்மாந்துறை வலயம் தந்தமையால்தான் கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் இவ்வாறானதொரு காலப்பகுதியில் இடம்பெறுகிறது. இதை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
இயன்றவரை பிந்தி விட்டு, இறுதியில் மிகவும் பிழையானதொரு இடமாற்றத் திட்டத்தினை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் வகுத்தது. எந்தவொரு தகவலும் இல்லாமல் அந்த இடமாற்றத் திட்டத்தை அவர்கள் வகுத்திருந்தார்கள். அதிபர்களிடம் எந்தவிதமான தகவல்களையும் பெற்றுக் கொள்ளாமல் அந்த இடமாற்றத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
அதை நாம் பிழையெனச் சுட்டிக் காட்டினோம். அதிபர்களிடம் தகவல்களைப் பெற்று – குறித்த இடமாற்றத்தை வகுக்குமாறு கூறினோம். அதன் பின்னர் இரவோடிரவாக அதிபர்களை அழைத்து தகவல்களைப் பெற்று மிகவும் அவசரமாக ஒரே நாளில் சம்மாந்துறை வலயத்துக்கான இடமாற்றத் திட்டத்தை வலயக் கல்வி அலுவலகம் வகுத்தது.
அந்தவேளை, ஏனைய வலயங்கள் அனைத்தும் சரியான தகவல்களுடன் தமது இடமாற்றத் திட்டங்களைச் சமர்த்திருந்தது. எனவே, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் இடமாற்றத் திட்டத்தை சரியாகவும், குறித்த காலப்பகுதியிலும் சமர்ப்பித்திருந்தால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்த இடமாற்றம் நடந்திருக்கும்.
அவ்வாறு நேர காலத்துடன் நிகழாமைக்குக் காரணம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகமாகும். இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கும் காலம் குறித்து உங்களுக்கு அதிருப்திகள் இருக்குமானால் இந்த இடமாற்றத்துக்கான உத்தரவுகளை வழங்கியவர்களிடம் நீங்க பேச முடியும்' என்றார்.
Dean Thursday, 16 June 2011 02:21 PM
ஆளை ஆள் குற்றம் சாட்டி வேலையில்லை, பிழை என்றால் அதற்கு பரிகாரம் காண வேண்டும். இவ்வாறு சிறு பிள்ளைத் தனமாக பேசி பதவிகளின் அந்தஸ்தை குறைக்காமல் முறையான இடமாற்றத் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்த ஆவன செய்ய வேண்டும். கிழக்கு கல்வி அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago